Thursday, April 22, 2010

முதல் பக்கம்

வணக்கம் நண்பர்களே..

மாறி வரும் காலச்சூழல்கள், விஞ்ஞான வளர்ச்சியின் பல்வேறு பரிமாணங்களால், இன்று உங்கள் அனைவருடனும் நான் சேர்க்கப்பட்டிருக்கிறேன் ... பயணங்களில் பலரை சந்திக்கிறோம். ஆனால் சிலரின் சந்திப்புகள் மறக்க முடியாதவை.... இன்னும் சிலருடயதோ மறக்க கூடாதவை...

பரிமாற்றங்கள் , தடுமாற்றங்கள் , மனமாற்றங்கள் , ஏமாற்றங்கள் என்று எத்தனை எத்தனையோ மாற்றங்கள் ....ஏற்றுக்கொள்வது , விலகிநிற்பது, எதிர்த்து போரிடுவது என்று ஒவ்வொரு மனிதனின் எதிர்நோக்கும் தனித்தன்மையோடு அவரவரின் சூழலை ஒட்டியே அமைந்து விடுகிறது.

ஜெயிக்க , தோற்க , கற்க, சிரிக்க, அழ - என்று இவைகளுக்காகத்தான் இந்த உலகத்தில் தான் படைக்கப்பட்டிருப்பதாய் ஒவ்வொருவருக்குள்ளும் பல அனுமானங்கள்.

ஆனால் , உண்மையில் ஒவ்வொரு மனிதனும் இப்படி ஒவ்வொன்றை பற்றி கவலைப்பட்டே , தான் இந்த உலகத்தில் வாழ்வதற்காக படைக்கப்பட்டிருப்பதை மறந்து போகிறான். இறுதியில், வாழ்க்கை போராட்டத்தில் தொலைந்தும் போகிறான்.

எனவே, நான் பதிவு செய்ய விரும்புவது,நீ நீயாக இருப்பதே வாழ்க்கை . நாம் நாமாக வாழ்ந்திருப்போம் , இன்றைய நிஜங்களைத்தொலைக்காமல்.

என்றும் இணைந்திருப்போம் ......அடுத்த பதிவுகளோடு விரைவில் நான்.....

3 comments:

  1. அழகான தமிழ் ஆழமான கருத்து....
    வாழ்கையின் மற்றொரு பரிமாணம் என்று சொல்லலாம்
    முயற்சிக்கு வாழ்த்துகள் !!

    Bala

    ReplyDelete
  2. Gayu....
    really gud... impressed by ur words d....

    ReplyDelete